உயர்கல்வி பாடநெறிகள் குறித்து ஆராய ஆணைக்குழு

உயர்கல்வி பாடநெறிகள் குறித்து ஆராய ஆணைக்குழு

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடநெறிகளின் தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை நியமிக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக, பல்கலைகழகங்கள் மற்றும் தனியார்  நிறுவனங்களில் நடத்தப்படும் பாடநெறிகளின் தன்மை குறித்து ஆராயவுள்ளதுடன் சிறந்த தன்மையுடன் நடத்தப்படும் பாடநெறிகளை மாத்திரம் மேற்கொண்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.