மொடல் உள்ளாடை
பிரிட்டனிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் ஆசிரிய உதவியாளராக பணியாற்றிய 21 வயதான ஜெம்மா லெய்ரட் எனும் யுவதி பிரிட்டனின் தர்ஹாம் பிராந்தியத்திலுள்ள பாடசாலையொன்றில் பணியாற்றியவர்.
உள்ளாடைகளுக்கு மொடலாக போஸ் கொடுத்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை மேற்படி ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்குத் தெரியவந்தது.
இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் பலர் முறைப்பாடு செய்ததையடுத்து, ஆசிரிய உதவியாளர் பணியிலிருந்து ஜெம்மா லெய்ர்ட் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அதிகாரிகளின் இந் நடவடிக்கையை ஜெம்மா விமர்சித்துள்ளார். தான் ஆசிரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தபோது, பெஷன்துறை நிறுவனமொன்றுக்கு உள்ளாடை மொடலாகப் பணியாற்றியதை பாடசாலை அதிகாரிகள் அறிந்திருந்தனர்” என அவர் கூறியுள்ளார். அதிகாரிகளின் நடவடிக்கையானது தன்னை ஒரு விபசாரி போன்று உணரவைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்