சாலிகா மைதானத்திற்குள் நுழைய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சாலிகா மைதானத்திற்குள் நுழைய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

நாரஹேன்பிட்டிய  சாலிகா மைதானத்துக்குள் நுழைவதற்கு தடைவித்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய உறுப்பினர்களும் அவர்களுடைய ஆதவாளர்களுக்குமே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு தடைவிதித்துள்ளது. அதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 14 நாட்களுக்கு இத்தடை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் ஸ்ரீ வர்தன, நாரஹேன்பிட்டிய பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, பொலிஸாரினால் நீதிமன்றத்தில் இத்தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.