மே தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு பூட்டு

மே தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு பூட்டு

சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி பிரதான ஊர்வலங்கள் நடைபெறும் கொழும்பு மற்றும் காலி ஆகிய மாநகர சபை பிரதேசங்களிலுள்ள மது விற்பனை நிலையங்கள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இம்மாவட்டங்களிலுள்ள ஏனைய உள்ளுராட்சி சபை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் காணப்படும் மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.