ரயில் கடவை வாயிற்காப்போர் பணி பகிஸ்கரிப்பில்..

ரயில் கடவை வாயிற்காப்போர் பணி பகிஸ்கரிப்பில்..

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் இன்று பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்காமைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நாடு பூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் 687இல் பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கை பாதுகாப்பற்ற ரயில் கடவையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் நிமல் சந்திரசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.