மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து  ஹத்துருசிங்க, இலங்கை அணிக்கு  சவால்…

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து ஹத்துருசிங்க, இலங்கை அணிக்கு சவால்…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை(01) நடைபெறவுள்ளது.

கொழும்பு –எஸ்.எஸ்.சீ மைதானத்தில் குறித்த இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்நிலையில் நாளைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையவுள்ளது.

இதற்கிடையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணி இலங்கை அணியை வெல்வதற்கு போதிய தகமையுடன் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)