உமா ஓயா திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு..

உமா ஓயா திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு..

உமா ஓயா திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டி உள்ளார்.

கொழும்பில் நேற்று(29) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இதுகுறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. உமா ஓயா திட்டத்தை எமது அரசுதான் ஆரம்பித்தது. உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் தான் வெடிப்புகள், ஏனைய பிரச்சினைகள் உருவாகின. பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருந்தால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது.

எனினும், தற்போது அந்த விடயத்தில் வேறொரு பிரச்சினை புகுத்தப்பட்டுள்ளது…” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)