அழகை மெருகேற்ற 25 அறுவை சிகிச்சைகளை செய்த பிறகும், இன்னும் வேண்டும் என அடம்பிடிக்கும் அலீரா..

அழகை மெருகேற்ற 25 அறுவை சிகிச்சைகளை செய்த பிறகும், இன்னும் வேண்டும் என அடம்பிடிக்கும் அலீரா..

அழகுக்காக இன்று உலகில் பெண்கள் அதிகம் மெனக்கெடுவது இயல்பாகிவிட்டது. இதனால், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவதும், தாய் பாலூட்ட மறுப்பது என இருந்த நிலை மாறி, இன்று அழகை பெரிதாக்கிக் கொள்ள பலரும் பல அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறார்கள்.

மும்பையில் பெண்ணுறுப்பை அழகாக்கிக் கொள்ள தனி கிளினிக் இருக்கிறது என்றால் அதை நீங்கள் நம்புவீர்களா? இருக்கிறது என்பது தான் உண்மை.

அழகின் மீதான ஒரு மோகம் தான் இது. இதோ! அலீரா அவெண்டான்னோ எனும் மாடல் தனது அழகை மெருகேற்றிக்கொள்ள 25 அறுவை சிகிச்சைகளை செய்த பிறகும், இன்னும் வேண்டும் என அடம்ப்பிடிக்கிறார்.

அலீரா முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது அவரது வயது 18. அப்போது அவர் தனது மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ள சர்ஜரி செய்து கொண்டார். அப்போதிருந்து இவருக்கு சர்ஜரி செய்து கொள்வதன் மீது ஒரு மோகம் துவங்கிவிட்டது.

முதல் அறுவை சிகிச்சை செய்த போது நீங்கள் என்ன மாற்றம் உணர்ந்தீர்கள் என கேட்ட போது, “வாவ்! ஆனால், ஒருசில முறை இம்பிளான்ட் மாற்றிய பிறகு ஏதும் மாறியதாக உணரவில்லை.” அதனால், அதிக மாற்றங்கள் கொண்டுவர விரும்புவதாக கூறுகிறார்.

கச்சிதமான உடல்வாகு பெற இவர் சர்ஜரிகள் மட்டுமின்றி, பெண்கள் அணியும் இறுக்கமான மார்பு கச்சு அணிகிறார். கடந்த 7 வருடமாக நாளுக்கு 23 மணிநேரம் அதை அணிந்தே வாழ்ந்து வருகிறார். இதனால் இவரது இடை அளவு 20 இன்ச் ஆகியுள்ளது.

இதுவரை அலீரா அவெண்டான்னோ 25 சர்ஜரிகள் செய்துள்ளார். இதில் நான்கு மார்பக இம்பிளாண்ட் சர்ஜரி, ஆறு லிபோசக்ஷன், நான்கு பாட்டம் இன்ஜெக்ஷன், மூன்று மூக்கு சர்ஜரிகள். மேலும், அவரது எல்லா பற்களும் ஃபேக், அதாங்க போலியானவை.
அனைத்தையும் பிடிங்கிவிட்டு, ஃபேக் டூத் ஃபிக்ஸ் செய்துள்ளார் அலீரா அவெண்டான்னோ. இவர் செய்துக் கொண்ட சர்ஜரிகள் காரணத்தால், இவரால் கருத்தரிக்க முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளதென்றால் பாருங்களேன்..

 

(rizmira)