இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்த அமைச்சரவை அனுமதி..

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்த அமைச்சரவை அனுமதி..

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பணியகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த பணியினை முன்னெடுப்பதற்கு குறித்த நிறுவனம் 235,000 அமெரிக்க டொலர்களை (கிட்டத்தட்ட 35.25 மில்லியன் ரூபா) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த தொகையினை பெற்றுக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(rizmira)