உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம்…

உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம்…

உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி கட்சி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்யும் நோக்கில் அரசு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் குறித்த இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மக்களை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)