சவூதி இளவரசர்களில் ஒருவர் இன்று இலங்கைக்கு விஜயம்..

சவூதி இளவரசர்களில் ஒருவர் இன்று இலங்கைக்கு விஜயம்..

சவூதி இளவரசர்களில் ஒருவரான பஹத் பின் முக்ரீன், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(21) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவராக இவர் காணப்படுகின்றதோடு, இவர் தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)