கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் சதொச நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை…

கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் சதொச நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை…

கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் சதொச நிறுவனத்திற்கு தொடர்பு கிடையாது என அதன் தலைவர் ரீ.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சதொச தலைமையகத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவிலான கொக்கேய்ன் போதைப் பொருள் அண்மையில் சீனிக் கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. விலை மனுக் கோரி குறைந்த விலையை கோரிய வர்த்தகரிடமிருந்து சதொச நிறுவனம் சீனியை இறக்குமதி செய்ய தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த இந்த கொக்கேய்ன் போதைப் பொருள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கவில்லை எனவும், நாளாந்த கூலி அடிப்படையில் கொள்கலன் இறக்கும் இடத்தில் பணியாற்றும் ஊழியர்களே இந்த சந்தேகத்திற்கு இடமான பொதிகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

(rizmira)