மீளவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் மாற்றம்..
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களிடையே மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படவுள்ளதாக அக்கட்சியின் பிரதம செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போதுள்ள தொகுதி அமைப்பாளர்களில் பலர் பெயரளவுக்கு மாத்திரமே இருக்கின்றனர். கட்சியின் முன்னேற்றம் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் காட்டாமல் காலம் கழித்து வருவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இதனால் அவ்வாறானவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்க கட்சியின் உயர்பீடம் தீர்மானித்திருக்கிறதோடு, எதிர்வரும் தேர்தலுக்கு முன் சகல தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்தி கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)