சிறை செல்லும் பிரபலங்களுடன் நல்லாட்சி அரசு ஒப்பந்தம்..

சிறை செல்லும் பிரபலங்களுடன் நல்லாட்சி அரசு ஒப்பந்தம்..

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு தண்டனை பெறுகின்ற சிலர் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களா என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிறைக்கு செல்ல வேண்டிய அரசியல்வாதிகள் சிறைக்கு செல்லாமல் முதலில் வைத்தியசாலைக்கே செல்கின்றனர் என சுட்டிக்காட்டிய அவர், கடந்தகால ஆட்சியின் போது, வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பல முறைகேடுகள் இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்படுவதாகவும் ஆசாத் சாலி தெரிவித்தார்.

 

(riz_mira)