உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு

உத்தரகாண்ட மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தர்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று(13) காலை உத்தர்காசி பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.