அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரச அலுவலங்களின் கடமை நேரங்களை மாற்றுவது தொடர்பிலான செயற்றிட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும்.

பிற்பகல் 3.35 முதல் 5 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.

நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு குறித்த இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)