திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு..

திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு..

காதல் ஜோடிகளான நாக சைதன்யா, சமந்தா இருவரது திருமணம் அடுத்த மாதம் 6ம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது.

இந்தத் திருமணத்திற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இவர்களது திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் அக்டோபர் 5ம் திகதி முதல் 8ம் திகதி வரை நான்கு நாட்கள் கோவாவில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

இந்து முறைப்படியும், கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின் ஐதராபாத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளது.

திருமண சடங்குகள் இந்து, கிறித்துவ முறைப்படி நடக்க உள்ளதால், அதில் உறவினர்கள் அனைவரும் பங்கு பெறும் விதத்தில்தான் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். தெலுங்குத் திரையுலகிலிருந்து சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், அவரது மனைவி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.