குகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன…

குகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குக்குலே கங்கை நீர்தேக்கத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த நீர் தேக்கத்தின் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி அறிவுறுத்தியுள்ளார்.