ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை விரைவில்…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை விரைவில்…

இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை ஆய்வுக்குட்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வரிச்சலுகையை பெறும் ஏனைய நாடுகளின் தகவல்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழு 10 நாட்களாக இலங்கையில் ஆய்வுகளை நடத்தி குறித்த அறிக்கைக்கான தகவல்களை வழங்கியிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)