ஆப்கான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார் சனா..

ஆப்கான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார் சனா..

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் நேற்று(13) கிரிக்கெட் மைதானத்தின் அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

சனத் ஜெயசூரிய மற்றும் கிரகாம் லெப்ரோய் ஆகியோர் குறித்த மைதானத்தில் நேற்று(13) காலை இருந்ததாகவும் குறித்த குண்டு வெடிப்பின் போது அதிஷ்டவசமாக வெளியேறி இருந்ததாகவும் குறித்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் இந்நாட்களில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான அணியின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய கடமையாற்றுவதுடன் கிரகாம் லெப்ரோய் போட்டி நடுவராக கடமையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்கொலைதாரிகள் மைதானத்தினுள் நுழைய முற்பட்ட வேளையில் நிறுத்தப்பட்டு பொலிசார் பரிசோதிக்கையிலேயே குறித்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

(rizmira)