மேத்யூஸ், பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டிலிருந்து விலகல்… மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில்… – பிரதமர்

மேத்யூஸ், பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டிலிருந்து விலகல்… மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில்… – பிரதமர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மேத்யூஸ், பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் குறித்த போட்டியில் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டித் தொடரின் முதல் போட்டி துபாயின் ஷேக் செய்யத் விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் 02 டெஸ்ட் போட்டிகள் இடம் பெறவுள்ளதோடு, அதில் 02வது டெஸ்ட் போட்டி இலங்கை அணி பங்கு கொள்ளும் முதலாவது பகலிரவு போட்டியாக அமையவுள்ளது.

அது தவிர, 5 ஒரு நாள் மற்றும் 3 T-20 போட்டிகளைக் கொண்டதாக இத்தொடர் அமையவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் நிலையில், இறுதி T-20 போட்டி மாத்திரம் பாகிஸ்தானின் லாகூரில் எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)