மெக்சிகோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 பேர் உயிருடன் மீட்பு…

மெக்சிகோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 பேர் உயிருடன் மீட்பு…

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக மீட்பு குழு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்  260 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் கட்டிடங்களுக்குள் சிக்கி இருக்கிறார்கள் எனவும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரம் மெக்சிகோ சிட்டி மற்றும் மெக்சிகோ சிட்டி மாகாணம், பிபூபலா, கவுர்வேரோ, டாக்ஸ்கா ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.