பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்…

பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்…

நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றும்(25), நாளையும்(26) இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் சேவையிலிருந்து இடைவிலக்கப்பட்டுள்ள  பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.