Update – முன்னாள் DIG லலித் ஜயசிங்க கைது…

Update – முன்னாள் DIG லலித் ஜயசிங்க கைது…

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று(25)  காவல்துறை விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடும் நிபந்தனைகளுடன் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Update ———– 25th of Monday 10.50 AM

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

2015ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவில், முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட குழுவினரால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சில விடயங்களை மறைக்க முற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே, லலித் ஜயசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.