கின்னஸ் சாதனைக்காக சாரியை ஏந்திய விவகாரம் – ஆளுநரும் விசாரணைக்கு பணிப்பு..

கின்னஸ் சாதனைக்காக சாரியை ஏந்திய விவகாரம் – ஆளுநரும் விசாரணைக்கு பணிப்பு..

கின்னஸ் உலக சாதனைக்காக கண்டி- கன்னோருவையில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த, சுமார் 3.2Km நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், குறித்த இந்த விவகாரம் தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கவும் விசாரணைக்கு பணித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வியமைச்சு ஆகியனவும் விசாரணைகளுக்கு ஏற்கெனவே பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(riz_mira)