டிசம்பர் மாதம் வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை…
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையில் இலங்கைக்கு வாயு மண்டல தளம்பல் நிலை காரணமாக மின்னல் மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில் நாட்டை சுற்றியுள்ள மற்றும் வங்காளவிரிகுடாவில் கடற்பிரதேசத்தில் வளிமண்டலவியலில் தளம்பல் நிலை வலுவடையக்கூடும் என்றும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.