சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 அன்று..

சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 அன்று..

இலங்கை சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

2018 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கே இப்போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சையை நடாத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டை கடந்த 15 ஆம் திகதி தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் 011 2785 230/ 011 2177 075 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

 

(rizmira)