இலங்கை அணியை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் விசேட கணிப்பு..
இலங்கை அணியை எதிர்கொள்வது கடினமானதாகவே இருக்கும் என பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அபுதாபியில் எதிர்வரும் 28ஆம் திகதி தொடங்கவுள்ளது, டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி நேற்று(24) அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தான் அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் மிஸ்பா உல்ஹக் டெஸ்ட் அணியை முதலிடத்துக்கு கொண்டு வந்தார்.
அதே போல என் தலைமையிலான அணியை சிறப்பாக வழிநடத்த முயற்சிப்பேன்.
இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்வது கடினமானதாகவே இருக்கும் என தான் நினைப்பதாக மேலும் கூறியுள்ளார்.
(rizmira)