ஈராக்கின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று பொதுவாக்கெடுப்பு..

ஈராக்கின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று பொதுவாக்கெடுப்பு..

ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரி இன்று(25) ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்டது. ஈராக் பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்திருந்தார்.

தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, இன்று(25) பொதுவாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் வசிக்கும் குர்துக்கள் குர்திஸ்தான் தனிநாடு கேட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால், சிரியா மற்றும் துருக்கி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி கூறியபோது, குர்து இன மக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவும், ஏதாவது பிரச்சினை எழுந்தால் இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் துணை அதிபர் நவுரி அல்-மாலிக் கூறியபோது, குர்து இன மக்களின் தனி நாடு கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இரண்டாவதாக இஸ்ரேல் நாடு உருவாவதை நாங்கள் அனுமதிக்கவில்லை. பொது வாக்கெடுப்பு திட்டத்தை குர்து இன தலைவர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.