சட்டமா அதிபர் உள்ளிட்ட 03 தரப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை..

சட்டமா அதிபர் உள்ளிட்ட 03 தரப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை..

சட்டமா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று(25) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் உள்ள மருத்துவ பீட ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத், தனக்கு பிணைக் கோரி தாக்கல் செய்துள்ள விண்ணப்பம், இன்று(25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்ன்துடுவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது மேற்குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைய ரயன் ஜயலத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)