இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி நேரத்தில் மாற்றம்..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி நேரத்தில் மாற்றம்..

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. குறித்த இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

முதல் போட்டி டிசம்பர் 10 ஆம் திகதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13 ஆம் திகதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி டிசம்பர் 17 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

பகல் – இரவு போட்டி என்பதால் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் மாதம் வட மாநிலங்களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதனைக் காரணம் காட்டி தரம்சாலா மற்றும் மொகாலி ஆட்டங்களில் தொடங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.

முதலில் 1.30 மணி என்றிருந்த தொடக்க நேரத்தை தற்போது 11.30 மணியாக மாற்றியுள்ளது. 11.30 மணிக்கு போட்டி தொடங்கினால், இரவு 7.30 மணியளவில் போட்டி முடிந்துவிடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது. இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

#rizmra