சுதந்திர தினத்தினை முன்னிட்டு முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர்..

சுதந்திர தினத்தினை முன்னிட்டு முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர்..

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் ஒன்றினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி முதல் 20ம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள குறித்த இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira