fb ஊடாக இனவாதத்தினை தூண்டுவோருக்கு… – பொலிஸ்மா அதிபரிடமிருந்து CID’க்கு கட்டளை..

fb ஊடாக இனவாதத்தினை தூண்டுவோருக்கு… – பொலிஸ்மா அதிபரிடமிருந்து CID’க்கு கட்டளை..

facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஊடாக இனவாதத்தினை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றத் தடுப்புத் திணைக்களத்திற்கு கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி காலி-கிந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் இனவாதத்தினை தூண்டும் வகையில் பொய்யான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டியிருந்தார்.

அவ்வாறான இனவாதிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#reeshma