சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா?

சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா?

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு, சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் நிறைய கவனம் தேவைப்படுகிறது. அதனால் 15 பொருட்கள் உள்ள, சருமத்தை மிருதுவாகவும், ஒளிரவும் செய்யும் செயல்பாடுகளைப் போல் பல வகைகளைக் கொண்ட மூலிகை தயாரிப்பை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது…

குங்குமாதி தைலம்:
இந்த எண்ணெயின் முக்கிய மூலப்பொருள் குங்குமப்பூ. இது சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் தனிப்பட்ட குணத்தைக் கொண்டுள்ளது.

சரும மாசுக்கள் நீங்கும்:
மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற குங்குமாதி தைல உட்பொருட்கள், சரும நிறத்தை வெளிர வைக்கும் திறன் கொண்டவை. இத்துடன், சரும மாசுகளை நீக்கும் திறனையும் கொண்டுள்ளது.

பருக்கள் மறையும்:
இந்த குங்குமாதி தைலத்தை பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைவதை நீங்கள் கண்கூடாக காண முடியும். இது பருக்களுக்கும், பருக்களால் ஆன கரும்புள்ளிகளுக்கும் மிகச்சிறந்த எதிரியாகும்.

கருவளையம்:
குங்குமாதி தைலத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உங்களது கண்ணுக்கு கீழ் அசிங்கமாக இருக்கும் கருவளையங்கள் மறைந்து, முகத்திற்கு ஒரு நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும்.

எப்படி பயன்படுத்துவது?
இந்த எண்ணையை உபயோகிக்க, ஒரு சில துளிகளை கையில் எடுத்துக் கொண்டு அதை முகத்தில் தடவ வேண்டும். இந்த எண்ணெய்யை கொண்டு மிருதுவாக உங்களது முகத்தில் விரல்களால் முகம் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். பருக்கள் இருந்தால், அழுத்தி மசாஜ் செய்யக் கூடாது.

எண்ணெய் பசை சருமம்:
எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.
குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது