கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மக்கள் பாவனைக்காக திறப்பு…

கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மக்கள் பாவனைக்காக திறப்பு…

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களினால் ஏற்படும் தடைகளில் இருந்து பாதசாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(23) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையின் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அருகாமையிலிருந்து ஒல்கொட் மாவத்தை வரை அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.