நாட்டின் பல மாகாணங்களில் மழை…

நாட்டின் பல மாகாணங்களில் மழை…

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், பிற்பகல் வேளையில் மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்கு , வடமேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும்.

இதேவேளை, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

இடியுடன் கூடிய மழையுடன் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும் எனவும், இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.