கொழும்பில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு…

கொழும்பில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு…

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை(25) 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

நாளை(25) காலை 8 மணி தொடக்கம் மறு நாள் அதிகாலை 2 மணி வரை கொழும்பு பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீஜயவர்தனபுர,கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் சொய்சாபுர குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.