கொட்டாஞ்சேனை பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து…

கொட்டாஞ்சேனை பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து…

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்த சந்தி வரையிலான வீதி இன்று(24) மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் புதிதாக நீர்க் குழாய் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக இப்பகுதிக்கான வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(24) இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை முழுமையாக வீதி மூடப்படும் எனவும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.