Twitter தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி  திடீர் பதவி இராஜினாமா…

Twitter தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி திடீர் பதவி இராஜினாமா…

சமூக வலைத்தளங்களில் முகநூலிற்கு (facebook) அடுத்த இடத்தில் இருக்கும் டுவிட்டருக்கு (twitter) உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் டுவிட்டரில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி நோட்டா திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் கலிபோர்னியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனமான SoFi எனும் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியவே டுவிட்டரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் டுவிட்டரில் பணியில் சேர்ந்த அந்தோணி நோட்டா டுவிட்டரில் வளர்ச்சிக்கு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து டுவிட்டரின் வருமானத்தை பெருக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#rishma