சகலதுறை வீரர் அசேல குணரத்ன T-20 போட்டிகளில் இருந்து விலகல்…
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு T-20 போட்டிகளிலும் இலங்கை அணி வீரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு போட்டிகளை கொண்ட குறித்த இந்த இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் 2ம் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பயிற்சியின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாடு திரும்பியுள்ள குணரத்ன தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு MRI ஸ்கேன் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
#rishma