ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த துருக்கி பெண்ணுக்கு ஈராக்கில் மரண தண்டனை…

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த துருக்கி பெண்ணுக்கு ஈராக்கில் மரண தண்டனை…

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 9 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும், துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனையும் விதித்து இன்று(19) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஈடுபட்டு வந்தனர். இருநாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் தாக்குதல் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 9 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும், துருக்கி நாட்டை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு மரண தண்டனையும் விதித்து இன்று(19) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஈராக் தீவிரவாத தடுப்பு நீதிமன்ற செய்தி தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.