மேத்யூஸ் இனது தலைமை குறித்து திலங்க கருத்து – ஹத்துரு திட்டத்தினை வெளிப்படுத்தினார்..

மேத்யூஸ் இனது தலைமை குறித்து திலங்க கருத்து – ஹத்துரு திட்டத்தினை வெளிப்படுத்தினார்..

இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிற்கான நிரந்தரமான தலைமை ஏஞ்சலோ மேத்யூஸ் இடம் வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால பங்களாதேஷ் சுற்றுப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த போட்டிகள் குறித்து இலங்கை அணியின் நிரந்தர தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவிக்கையில்;

“வீரர்களுடன் நிறைய தொடர்புகளை வைத்திருந்தோம்.. அவர்களது வேலைகள் என்னவென்பது குறித்து.. அவர்களது திறன்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து.. பயமின்றி முன்னோக்கி சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது என்பது குறித்து அவர்களை தெளிவூட்டினோம்.. அவை தான் அணி வெற்றியடைய முக்கிய காரணங்களாக இருந்தவை நான் அல்ல.. உண்மையில் நான் துடுப்பெடுத்தாடவில்லையே.. அவர்கள் தான் அடித்தார்கள்.. நான் நினைக்கவில்லை என்னால் பெரிய மாற்றம் ஒன்று உருவானதென்று… அணியின் வீரர்கள் திறமையாக நன்கு விளையாடினார்கள். அது தான் வெற்றிக்கு காரணம்…”

 

 

#rishma