ரயில்வே சாரதிகளில் சிலர் பணிப்புறக்கணிப்பில் – நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பிற்கும் வாய்ப்பு…

ரயில்வே சாரதிகளில் சிலர் பணிப்புறக்கணிப்பில் – நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பிற்கும் வாய்ப்பு…

புகையிரத சேவையாளரை தாக்கியமைக்கு கண்டனம் தெரிவித்து திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகியவற்றுக்கு இடையிலான ரயில் சேவையில் உள்ள ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகளது சங்கத்தின் தலைவர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

நேற்று(20) இரவு திருகோணமலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருபது வயதுடைய இளம் பெண்ணொருவர் தற்கொலை சம்பவத்தின் போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட குறித்த நபர்களை கைது செய்யாதவிடத்து நாடு தழுவிய ரீதியில் தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma