இருபதுக்கு – 20 இற்கு ஓய்வு வழங்கிய மொடாசாவுக்கு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து விசேட அழைப்பு…

இருபதுக்கு – 20 இற்கு ஓய்வு வழங்கிய மொடாசாவுக்கு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து விசேட அழைப்பு…

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிற்கான குழாமில் பங்கேற்குமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மஷ்ரபே மொடாசாவிடம் கோரியுள்ளது.

அண்மையில் இலங்கையுடனான இருபதுக்கு இருபது போட்டிக்குப் பிறகு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

34 வயதுடைய மொடாசா இருபதுக்கு இருபது போட்டிகள் 54 இல் விளையாடி 42 விக்கெட்களை கைப்பற்றியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த வருடம் பங்களாதேஷ் அணி இருபதுக்கு இருபது போட்டிகள் 13இல் விளையாடி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma