நெருக்கமாக நடிக்க பயந்த ஹீரோவுக்கு தைரியம் கொடுத்த ரம்யா…

நெருக்கமாக நடிக்க பயந்த ஹீரோவுக்கு தைரியம் கொடுத்த ரம்யா…

ரம்யா நம்பீஸன் நடிக்கும் புதிய படம் ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’. இதில் ரம்யாவுடன் காதல் காட்சியில் நெருக்கமாக நடிக்க பயந்தார் புதுமுக ஹீரோ கவின்.

இதுபற்றி பட இயக்குனர் சிவா அரவிந்தன் கூறியது: மூன்று நண்பர்களைபற்றிய கதையாக உருவாகிறது. கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் நண்பர்களாக நடிக்கின்றனர்.

கவினுக்கும், ரம்யாவுக்கும் காதல் காட்சிகள் படமாக்க வேண்டி இருந்தது. கவினுக்கு முன்னதாக ரம்யாவை அறிமுகம் இல்லாததால் காட்சி தொடங்குவதற்கு முன் ரம்யாவிடம் மனம் விட்டுபேசும்படி இயக்குனர் கூறியுள்ளார்.

அருகில் சென்ற கவின், ‘சாப்பிட்டீங்களா, எப்படியிருக்கீங்க’ என்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். பிறகு காட்சியை படமாக்க முயன்றபோது ரம்யாவுடன் நெருக்கமாக நடிக்க பயந்தார்.

ஏன் இப்படி செய்கிறீர்கள், தைரியமாக நடியுங்கள் என்று கூறியும் அவர் பெரிய நடிகை எப்படி நெருக்கமாக நடிப்பது என்று கவின் கூறியுள்ளார்.

இவரிடம் சொன்னால் வேலைக்கு ஆகாது என்று ரம்யாவை அழைத்து ஹீரோவின் தயக்கத்தை எடுத்துக் கூறி, அதை புரிந்துகொண்ட ரம்யா, கவினுக்கு தைரியம் சொல்லி நெருக்கமாக நடிக்க ஒத்துழைப்பு தந்தார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ளது. தரண் இசை. சிம்பு, ரம்யா நம்பீஸன் பாடல் பாடியுள்ளதுடன் ரவிந்தர் சந்திரசேகரன் தயாரிப்பு. யுவா ஒளிப்பதிவு செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.