ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது…

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது…

ஹெரோயின் வில்லைகளை விழுங்கி நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கும் பின்னர் டுபாய்க்கும் பயணித்த பின்னரே இலங்கையை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நேபாள் நாட்டை சேர்ந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8 ஹெரோயின் வில்லைகள் அவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.