கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற இவற்றை ட்ரை பண்ணி பாருங்கள்…

கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற இவற்றை ட்ரை பண்ணி பாருங்கள்…

கரும்புள்ளி பெரும்பாலும் முகத்திலும் கழுத்திலும் காணப்படும். மேலும், முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.

நீராவி:
கரும்புள்ளிகளை இயற்கை மற்றும் எளிமையான முறையில் அகற்ற நீராவியே சிறந்தது. நீங்கள் செய்ய வேண்டியது, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் உங்கள் முகத்தை நீராவி பிடிக்க வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் மாஸ்க்கை மெதுவாக முகத்தில் போடலாம்.

பாதாம் ஃபேஸ் ஸ்க்ரப்:
நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து அதை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். அதேபோல் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் ஆகியவை மிகத் தீவிரமாக இருப்பவர்கள், பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர மாசு மருவற்ற சருமத்தைப் பெற முடியும்

பேக்கிங் சோடா:
இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். பிறகு அதை கொண்டு மெதுவாக பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் முகத்தை காயவைத்து பின்னர் மிதமான தண்ணீரில் முகத்தை அலம்பவேண்டும். கரும்புள்ளி முற்றிலும் போகும் வரை இதை வாரத்திற்கு 2 தடவை செய்யவேண்டும்.

சூடான மசாஜ்:
கரும்புள்ளியை நீக்க சூடான மசாஜ் ஒரு சிறந்த தீர்வு. ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுடைய தண்ணீரை எடுத்து அதில் சுத்தமான துணியை நனைத்து அதை கரும்புள்ளி உள்ள இடங்களில் 15 நிமிடம் வைக்கவும். அவ்வாறு செய்வதனால் விரைவில் உங்கள் கரும்புள்ளி மற்றும் தோல் துளைகளை அகற்றலாம் .

முட்டை:
முட்டையும் ஒரு வித எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்று. ஒரு ஸ்பூன் ஹனி மற்றும் முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி அந்த கலவையை கரும்புள்ளி உள்ள இடத்தில் போட்டு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்

கடலை மாவு:
கடலை மாவு, மஞ்சள், மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதை முகத்தில் பயன்படுத்தலாம். கடலை மாவு சருமத்தில் எண்ணெய் பசை இருப்பது போல் சிலர் உணர்வார்கள். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கடலைமாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை வெளியேற்றும். அதனால் சருமம் மேலும் வறட்சியடையும்.

சர்க்கரை:
சர்க்கரை கொண்டும் கரும்புள்ளியை அகற்றலாம் . அதற்கு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மட்டும் பூசி வர வேண்டும். அதேபோல் தக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரையைத் தோய்த்து முகத்தில் நன்கு ஸ்கிரப் போல தேய்த்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர வேண்டும்.

எலுமிச்சை:
கரும்புள்ளியை நீக்க எலுமிச்சை சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். ஃப்ரெஷ் எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து ஸ்க்ரப் தயாரித்து அதைக்கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் உள்ள பருக்களில் சிட்ரிக் அமிலம் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படி இருப்பவர்கள் இரண்டு துளிகள் நீரை எலுமிச்சை சாறோடு சேர்த்துக் கொண்டால் எரிச்சல் வராது.

டூத்பேஸ்ட்:
சிறிதளவு டூத்பேஸ்ட் எடுத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் மெதுவாக தடவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கரும்புள்ளி முற்றிலும் மறைந்துவிடும். சென்சிடிவ் ஸ்கின், ஸ்கின் அழற்சி உள்ளவர்கள் இதை முயற்சி செய்ய வேண்டாம். டூத் பேஸ்ட்டில் உள்ள கெமிக்கல்கள் அழற்சியை உண்டாக்கும்.

கற்றாழை:
கற்றாழை கரும்புள்ளியை நீக்க பெரிதும் உதவுகிறது. கற்றாழை ஜெல் அல்லது ஜூஸை எடுத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி, அரை மணி நேரம் நன்கு ஊறவிட்டு மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளி விரைவில் நீங்கும். அதோடு சருமத்தில் ஏதேனும் பூஞ்சைத்தொற்றுக்கள் இருந்தாலும் குணமடையும்.

செய்யவேண்டியவை:
* தினம் இரண்டு முறை தவறாமல் முகத்தை கழுவவேண்டும்.
* தினசரி உப்பு தண்ணீர் கொண்டு கரும்புள்ளி உள்ள இடத்தை கழுவவும். * மென்மையான ஸ்க்ரப் கொண்டு முகத்தை கழுவவேண்டும்.
* உங்கள் வழக்கமான உணவில் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை சேர்க்கவும்.
* எண்ணெய் இல்லா பேசியல் கிலேன்செர், லோஷன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

செய்யக்கூடாதவை:
* அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஜுங்க் உணவை தவிர்க்கவும். *மதுபானங்கள் மற்றும் புகைபிடிப்பதை தவிர்க்கவும்.
* முகத்தில் மேக்கப் உடன் உறங்கக்கூடாது.
* எக்காரணத்தை கொண்டும் கரும்புள்ளியை கையால் அழுத்த வேண்டாம். அவ்வாறு செய்வது அதை அதிகப்படுத்தும்.