பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஒப்பந்த வீரர்களது எண்ணிக்கையினை 10 ஆகக் குறைத்தது…

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஒப்பந்த வீரர்களது எண்ணிக்கையினை 10 ஆகக் குறைத்தது…

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தமது மத்திய ஒப்பந்தத்தின் வீரர்களது எண்ணிக்கையை 10ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது, 16 வீரர்களுடன் மத்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனாலும் கடந்த தினம் இடம்பெற்ற கிரிக்கெட் சபையின் கூட்டத்தை அடுத்து, அந்த எண்ணிக்கையை 10ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீரர்களது விளையாட்டுத் திறன் பின்னடைவை சந்தித்திருக்கின்ற நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய ஒப்பந்தத்தில், தமீம் இக்பால், தைஜுள் இஸ்லாம், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லாஹ், மஷ்ரபே மொர்டாசா, மொமினுள் ஹக், முஸ்தபிதுர் ரஹ்மான், ருபெல் ஹொஸ்ஸா, மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.