சீனாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி…

சீனாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி…

சீனாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை சுமார் 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவத்தில் 18 பேர் சிக்கி பலியாகி உள்ளதோடு, மேலும் 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவது இல்லை. அதனை அமுல்படுத்துவதும் முறைப்படுத்தப்படவில்லை. இதனால் அந்நாட்டில் தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.