ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று இறுதி தீர்மானம்…

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று இறுதி தீர்மானம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் இன்று(25) மீண்டும் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கூடவுள்ளது.

கட்சியின் பதவி நிலைகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இந்த அரசியல் பீடம் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கட்சியின் பதவி நிலைகள் குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ள இன்று(25) மாலை 5.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தின் போது கட்சியின் 26 பதவி நிலைகள் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. மேலும், இறுதித் தீர்மானங்களை நாளை(26) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Rishma